வயது முதிர்வு காரணமாக யானை உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வயது முதிர்ச்சியடைந்த ஆண் யானை உயிரிழந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வயது முதிர்ச்சியடைந்த ஆண் யானை உயிரிழந்துள்ளது.குருப்பனூர் வன பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட வனத்துறையினர் யானை ஒன்று தள்ளாடி கொண்டிருப்பதை கண்டனர்.இதுகுறித்து வனகால்நடைத் துறை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அவர்கள் வந்து சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே யானை பரிதாபமாக உயிரிழந்தது.
Next Story