பழனி எம்.எல்.ஏ.விடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதலமைச்சர் - நலமுடன் இருப்பதாக கூறிய எம்.எல்.ஏ பழனி

கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனியிடம், தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் பழனிசாமி நலம் விசாரித்தார்.
பழனி எம்.எல்.ஏ.விடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதலமைச்சர் - நலமுடன் இருப்பதாக கூறிய எம்.எல்.ஏ பழனி
x
கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனியிடம், தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் பழனிசாமி நலம் விசாரித்தார். கொரோனாவால் முடங்கியுள்ளோருக்கு நிவாரண உதவிகளை வழங்கிய எம்.எல்.ஏ. பழனி, கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ. பழனியின் மகன் செல்வத்திடம் நலம் விசாரித்த முதலமைச்சர், இன்று காலை 10 மணிக்கு எம்.எல்.ஏ பழனி மற்றும் அவரது மற்றொரு மகன் வினோத் ஆகியோரிடம் நலம் விசாரித்ததாக கூறியுள்ளார். அப்போது, தேவையான உதவிகளை செய்யுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்த முதலமைச்சரிடம், தாம் நலமுடன் இருப்பதாக பழனி கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்