ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வருவதாக கூறி, ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, ஆர். எஸ். பாரதியை கைது செய்ய கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பட்டியல் இன மக்களை தொடர்ந்து அவமதித்து வரும் திமுக நிர்வாகிகளை கண்டிக்காத திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பவானி

இதேபோல் ஈரோடு மாவட்டம் பவானியில், பட்டியல் இனத்தை சேர்ந்த அரசு அதிகாரிகளை தொடர்ந்து இழிவாக பேசி வரும் திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்தும்,  ஆர்.எஸ்.பாரதியை கைது செய்யக்கோரியும், அதிமுக சிறுபான்மையினர் பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்

சென்னை, திருவொற்றியூரில், ஆர்.எஸ் பாரதியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.பாரதி பட்டியல் இன மக்களை இழிவாக பேசியும், அவர்கள் மனம் புண்படும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினர். முக கவசம் அணிந்து கொண்டு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எடப்பாடி

எடப்பாடி மற்றும் மகுடஞ்சாவடி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும் அருந்ததியர் தெரு மக்கள், ஆர்.எஸ். பாரதியை கைது செய்ய வலியுறுத்தியும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்