ஜூன் 1 முதல் தமிழகத்துக்குள் ரயில் சேவை...

ஜூன் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்திற்குள் நான்கு அதிவிரைவு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
x
ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 
கோவை -மயிலாடுதுறை-கோவை இடையே இயக்கப்படும் ஜன்சதாப்தி சிறப்பு ரயில் செவ்வாய் கிழமை தவிர மற்ற நாட்களில்  இயக்கப்படும்.

*கோவையில் காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த  ரயில் மதியம் 1.40 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடையும்.  

* மறுமார்க்கத்தில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கோவை சென்றடையும் 

* இதேபோல மதுரை-விழுப்புரம்-மதுரை அதி விரைவு சிறப்பு ரயிலானது, மதுரையில் இருந்து 7 மணிக்கு புறப்பட்டு 12.05 மணிக்கு விழுப்புரம் வரும். 

* பின்னர், மாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 9.20 மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

* இதேபோன்று திருச்சி-நாகர்கோவில்-திருச்சி, கோவை-காட்பாடி-கோவை இடையேயும் அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

* இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்குகிறது. 

* ரயில்கள் புறப்படும், சேரும் மற்றும் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் குறைந்த பட்சம் 2 டிக்கெட் கவுன்டர்கள் செயல்படும் எனவும் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்