திருச்சுழி குண்டாறு பகுதிகளில் மணல் கடத்தல் - 3 லாரிகள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோணபனேந்தல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியே மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த 3 பேரை கைது செய்தனர். இதையடுத்து, மணல் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட கரிசல்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story