தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிர் நீத்த 13-பேருக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
x
தூத்துக்குடியில் 2018-ல் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடந்த  போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் சிக்கி  13-பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இன்று  அஞ்சலி செலுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த  மினிசகாயபுரத்தை சேர்ந்த  ஸ்னோலின் குடும்பத்தினர், அவரது படத்திற்கு வீட்டின் வாசல் முன்பு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல, பாத்திமா நகர் பகுதி மக்கள்  13-பேரின் பாடங்களை வைத்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த 13-பேர் நினைவாக  நினைவுத் தூண் அமைக்க அரசுக்கு 2 வருடங்களாக வைத்து வரும் கோரிக்கைக்கு இன்னும் அரசு செவிசாய்க்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அரசு முன்வராத நிலையில் நாங்களே நினைவு தூண் வைக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்