ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் - அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் மீது வழக்கு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு திரும்பப் பெறப்படாத நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது.
ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் - அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் மீது வழக்கு
x
தமிழகம் முழுவதும் ஊரடங்கு திரும்பப் பெறப்படாத நிலையில் சில  தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன்  தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பல்வேறு அமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளிக்க கூட்டமாக வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் உரிய சமூக விலகலை கடைபிடிக்காமல் திரண்டதாக அய்யாக்கண்ணு உள்பட நான்கு தரப்பினர் மீது செஷன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்