"யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை" - வருத்தம் தெரிவித்தார் தயாநிதி மாறன்

தமிழக தலைமைச்செயலாளருடனான தி.மு.க எம்.பிக்கள் சந்திப்பு பற்றிய சர்ச்சை கருத்துக்கு தயாநிதிமாறன் வருத்தும் தெரிவித்துள்ளார்.
யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை - வருத்தம் தெரிவித்தார் தயாநிதி மாறன்
x
கடந்த இரு தினங்களுக்கு முன் தலைமைச்செயலாளரை சந்திக்க சென்ற தி.மு.க எம்.பிக்களுக்கு அவமரியாதை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் தெ​ரிவித்த கருத்து சர்ச்சையானது. 

இந்த விவகாரம் குறித்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். 

இதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், யாருடைய மனதையும் புண்படும் நோக்கம் தனக்கு சிறிது கூட இல்லை என் கூறியுள்ளார். 

எம்.பிக்களை தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில் தான் கூறியதாகவும் தயாநிதிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்