வங்கி கணக்கில் தவறுதலாக பணம் முதலீடு - நேர்மையாக பணத்தை ஒப்படைத்த விவசாயி

வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி தன் நிலத்தில் விளைந்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தார்.
வங்கி கணக்கில் தவறுதலாக பணம் முதலீடு - நேர்மையாக பணத்தை ஒப்படைத்த விவசாயி
x
வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி தன் நிலத்தில் விளைந்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தார். அப்போது அவருக்கு 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கான ரசீது வழங்கப்பட்டது. ஆனால் வங்கியில் சென்று பார்த்த போது 3 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கணக்கில் ஏற்றப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கூடுதலாக வந்த தொகையை உடனடியாக நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீண் நாயரிடம் வழங்கினார். விவசாயியின் நேர்மையை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்