தேனி மாவட்ட எல்லையில் தீவிர சோதனை - உடல் பரிசோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதி

தேனி மாவட்டத்தில் உள்ள எல்லைகளில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து 24 மணிநேர தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
x
தேனி மாவட்டத்தில் உள்ள எல்லைகளில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து 24 மணிநேர தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிப்பட்டி கணவாய் அருகே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. முறையான அனுமதி ஆணை இல்லாமல் தேனி மாவட்டத்திற்குள் எந்த வாகனத்தையும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் நடைபெறும் இந்த சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை பணியாளர்கள், வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளிக்கின்றனர். மேலும் வாகனங்களில் வருபவர்களும்  உடல் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்