சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
x
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை அம்மா மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அப்போது சென்னையில் கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவது, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்