ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள்...

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த‌தால், கொரோனா நோயாளிகள் தனியார் கல்லூரியில் உருவாக்கப்பட்ட கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
x
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதிதாக 231 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதிக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை முன்பே கணித்திருந்த சுகாதாரத்துறை, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 180 புதிய படுக்கை அறைகளைக் கொண்ட கொரோனா வார்டினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த‌து. தற்போது, 80 படுக்கையறைகள் தயாராக உள்ளநிலையில், அவசர நிலை கருதி, 40க்கும் மேற்பட்ட கொரோனா நோய்த்தொற்று உடையவர்களை இடமாற்றம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து, இங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்