முத்திரை வரியை ரத்து செய்ய கோரிக்கை - மதுரை எம்.பி.சு.வெங்கேடசன் முதலமைச்சருக்கு கடிதம்
சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு, வழங்கப்படும் வங்கி கடன்களில் முத்திரை வரியில் இருந்து விலக்கு மற்றும் பிணை வைக்கப்படும் சொத்திற்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எம்.பி.சு. வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு, வழங்கப்படும் வங்கி கடன்களில் முத்திரை வரியில் இருந்து விலக்கு மற்றும் பிணை வைக்கப்படும் சொத்திற்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில், மின்சாரக் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, உரிமக் கட்டணம் மற்றும் அனைத்து சட்ட பூர்வ கட்டணங்களும் செலுத்தப்பட சிறு மற்றும் குறு தொழில்முனைவோருக்கு, ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Next Story