தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்புக்காக ஏற்கனவே தேர்வாகி பயிற்சியில் உள்ள 8 ஆயிரத்து 538 காவலர்களை வரும் 3ஆம் தேதிக்குள் பணியில் அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.
x
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்புக்காக ஏற்கனவே தேர்வாகி பயிற்சியில் உள்ள 8 ஆயிரத்து 538 காவலர்களை வரும் 3ஆம் தேதிக்குள் பணியில் அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இது தொடர்பான பாதுகாப்பு பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் காய்ச்சலோ அல்லது சுவாசப் பிரச்சினைக்குரிய அறிகுறிகள் இருந்தாலோ, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை பயிற்சி டிஜிபி கரன் சின்ஹா பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்