சென்னையில் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ

சென்னையில் தனியார் மருத்துவமனையில் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
கடந்த மூன்றாம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த  பெண் மருத்துவருக்கு, கொரோனோ உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பெண் மருத்துவரின் தந்தைக்கு ஏற்கனவே கடந்த நான்காம் தேதி கொரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது வீடு மற்றும் மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனையில், சென்னை மாநகராட்சி சார்பில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி அடித்து வருகின்றனர். மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனைக்கு சீல் வைக்கவும், அங்கிருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனோ தொற்று இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்