கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்டது மேலப்பாளையம்

நெல்லையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேலப்பாளையத்தை தனிமைப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்டது மேலப்பாளையம்
x
மேலப்பாளையத்தில் வசிப்பவர்கள் யாரும் வெளியில் வர கூடாது என்றும் , வெளிநபர்கள் யாரும் மேலப்பாளையத்திற்குள் செல்லக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார். டெல்லி மாநாட்டிற்கு சென்ற நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள  கொரோனா தடுப்பு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 15க்கும் மேற்பட்டவர்கள்  மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலப்பாளையம் செல்லும் அனைத்துப் பகுதிகளும் அடைக்கப்பட்டு  காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலப்பாளையத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு சார்பில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்