ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் நிவாரண பணிகள் தொடக்கம் - வார விடுமுறை இல்லாமல் இயங்க தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நியாயவிலை கடைகள் வார விடுமுறை இல்லாமல் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் நிவாரண பணிகள் தொடக்கம் - வார விடுமுறை இல்லாமல் இயங்க தமிழக அரசு உத்தரவு
x
தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நியாயவிலை கடைகள் வார விடுமுறை இல்லாமல் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நியாய விலை கடைகள் ஏப்ரல் 3 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை வார விடுமுறை இல்லாமல் இயங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி நிவாரண நிதி உதவி மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த நாள் 3 ஆம் தேதி வார விடுமுறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  அந்த வார விடுப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்