"டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்" - அமைச்சர் கடம்பூர் ராஜு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
x
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அவர், சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளான செப்டம்பர் 24 ம் தேதி, அரசு விழாவாக கொண்டாடப்படும் என கூறினார். இதேபோல், ராமசாமி படையாச்சியார், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, நாராயணசாமி நாயுடு ஆகியோரின் பிறந்த நாள்களும்,  அரசு விழாக்களாக கொண்டாடப்படும் என்றும், அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்