கொரோனா தடுப்பு நடவடிக்கை - நளினி- முருகன் சந்திப்பு ரத்து
வேலூரி மத்திய சிறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக , இன்று நடைபெறவிருந்த நளினி - முருகன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
கொரோனா எதிரொலியாக வரும் 31-ம் தேதி வரை கைதிகள், தங்கள் உறவினர்கள் மற்றும் வக்கீல்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்தும் வரும் நளினி, அவரது கணவர் ஆகியோர் நீதிமன்ற உத்தரவுபடி 15 நாட்களுக்கு ஒரு முறை சந்திப்பது வழக்கம். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நளினி -முருகன் சந்திப்பு ரத்தானது.
Next Story