மதுரையில் போலி டாக்டரை கொலை செய்த 2 பேர் கைது

மதுரையில் போலி டாக்டரை கொலை செய்த 2 பேரை 15 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் போலி டாக்டரை கொலை செய்த 2 பேர் கைது
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியை சேர்ந்த பால்ராஜ் என்ற போலி டாக்டர் கடந்த 5 ஆம் தேதி கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவரது மரணம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தியதில் விஜயராஜன் என்பவர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் அரசு பேருந்து ஓட்டுநர் முத்துக்குமார், சரவணகுமார் ஆகிய 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலையான பால்ராஜ், போலியாக மருத்துவம் செய்து வந்ததோடு, பணத்தை வட்டிக்கு விட்டும் வந்துள்ளார். இதில் முத்துக்குமாருக்கு 18 லட்ச ரூபாய் கொடுத்த பால்ராஜ், அதனை திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் பால்ராஜை கொலை செய்ததாக தெரியவந்தது. கைதான 2 பேரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில்  கொலையில் தொடர்புடைய  சின்னான் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்