ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை - இறப்பதற்கு முன் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு செல்பி

வாணியம்பாடி அருகே ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை - இறப்பதற்கு முன் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு செல்பி
x
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சாமரிஷிகுப்பத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் நந்தினி என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். நட்பாக ஆரம்பித்த இவர்களின் உறவு காதலாக மாறியிருக்கிறது. ஆனால் ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழும் நந்தினியை திருமணம் செய்ய ராமதாஸின் வீட்டில் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த காதல் ஜோடி, ஆம்பூர் வீரவர்கோயில் அருகே உள்ள ரயில்வே மார்க்கத்திற்கு சென்றனர். ரயில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு செல்பி எடுத்துக் கொண்ட அவர்கள், பின்னர் அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் சடலங்களையும் மீட்ட  போலீசார் மரணம் குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்