ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் - கடலூர் மாவட்டத்தில் 900 ரேஷன் கடைகள் மூடல்

ரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 900 ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது.
ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் - கடலூர் மாவட்டத்தில் 900 ரேஷன் கடைகள் மூடல்
x
நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம், ஓய்வூதியம், பணிவரன் முறை உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள், இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து115 ரேஷன் கடைகளில் 900 கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் ஏழு மண்டலங்களில் நடைபெற இருந்த சிறை நிரப்பும் போராட்டம், கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்