பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியர்

அரசு பள்ளியில் பயிலும் பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளை தலைமை ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.
x
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மங்கலம் கிராமத்தில் அரசுத் தொடக்கப் பள்ளி  தலைமை ஆசிரியராக ஜெயசந்திரன் உள்ளார் ...   

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 64 மாணவ, மாணவிகள் மட்டுமே இங்கு பயின்று வந்தனர் . மாணவர் வருகையையும் , சேர்ப்பையும்   அதிகரிக்க முடிவு செய்த அவர் , 5-ம் வகுப்பு மாணவர்கள்  விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால்  விமானத்தில் அழைத்து செல்வதாக கூறினார் . 

இதனால் ஆர்வமுடன் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். மேலும் படிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கினர். இதனையடுத்து, 5 ஆம் வகுப்பில் படித்து வந்த 20 மாணவர்களையும்,  உடன் பணிபுரியும் 4 ஆசிரியர்களையும் தனது சொந்தச் செலவில் சென்னைக்கு இரண்டு நாள் ஜெயசந்திரன் சுற்றுலா அழைத்து சென்றார்

மாணவர்களின் கனவை நிறைவேற்ற தமக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும், இந்த நிகழ்வு தமக்கு மன நிறைவு தந்ததாகவும் கூறுகிறார் தலைமை ஆசிரியர் ​ஜெயசந்திரன்..



விமான பயணத்திற்கு பிறகு மற்ற மாணவர்களும் தற்போது கல்வி மீது கனவம் செலுத்தி வருவதாக தெரிவிக்கும் ஜெயசந்திரன், இந்த திட்டத்தை மற்ற மாணவர்களுக்கும் விரிவுப்படுத்த நினைப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்