முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை - தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வரும் போலீசார்
அருப்புக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே உள்ள மல்லாங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பில்டிங் காண்ட்ராக்டர் அக்னி ராமன். இவர் தமது சித்தப்பாவின் நினைவிடத்திற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை வழிமறித்த மர்ம கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனை கொண்டு செல்லும் போது வழியில் உயிரிழந்தார். ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அக்னி ராமன் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story