எலும்பு முறிவு ஏற்பட்டு அசையாமல் கிடந்த மலைப்பாம்புக்கு எலும்பு முறிவு சிகிச்சை அளித்த மருத்துவர்

எலும்பு முறிவு ஏற்பட்டு அசையாமல் கிடந்த மலைப்பாம்புக்கு எலும்பு முறிவு சிகிச்சை அளித்த மருத்துவர்
எலும்பு முறிவு ஏற்பட்டு அசையாமல் கிடந்த மலைப்பாம்புக்கு எலும்பு முறிவு சிகிச்சை அளித்த மருத்துவர்
x
நெல்லை மாவட்டம் கிலாக்குளம் கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டம் ஒன்றில் சுமார் 3 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று அசைவின்றி இருப்பதாக ரோந்து சென்ற காவல் ஆய்வாளர் சாம்சனுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவர் பிரான்சிஸ் ராய்க்கு சாம்சன் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து பாம்பு மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மலைபாம்புக்கு எலும்பு முறிவு சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு, மாவட்ட வன அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. மலைப்பாம்பை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் காவல் ஆய்வாளருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்