கொரோனா வைரஸ் எதிரொலி:வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு

கொரோனா வைரஸ் எதிரொலியாக தூத்துக்குடிக்கு வரும் வெளிநாட்டு கப்பல்கள் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலி:வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு
x
கொரோனா வைரஸ் எதிரொலியாக, தூத்துக்குடிக்கு வரும் வெளிநாட்டு கப்பல்கள், துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான பயணிகள் கப்பல்களும், சரக்கு கப்பல்களும், துறைமுக எல்லைக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், கப்பலில் வரும் பயணிகளுக்கு, தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக, துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா அச்சம் காரணமாக நேற்று தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்தபோது கைதுசெய்த 15 இலங்கை மீனவர்களை, அந்நாட்டு கடற்படையிடம் ஒப்படைக்க, இந்திய கடலோர காவல்படையினர் முடிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்