மூதாட்டியிடம் 12 சவரன் நகை பறிப்பு - கொரோனா அச்சத்தை பயன்படுத்தி கைவரிசை
கொரனோ வைரஸ் அச்சத்தை பயன்படுத்தி மூதாட்டியிடம் 12 சவரன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி இந்திராநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியரின் மனைவி பேபி. இவர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, போலீஸ் என கூறி, ஒருநபர் தனியாக அழைத்து சென்றார். அங்கு நின்ற மற்றொரு நபரிடம் கொரோனா வைரஸ் காரணமாக 2 நாட்களுக்கு யாரும் நகை அணியக்கூடாது எனவும், நகைகளை கழட்டி தருமாறும் கூறியுள்ளனர். உடனே மூதாட்டி, 12 சவரன் நகைகளை கழட்டி கொடுத்துள்ளார். பின்னர் துணியால் நகைகளை கட்டி மூதாட்டியிடம் மீண்டும் கொடுப்பது போல் காட்டிவிட்டு அவரை அனுப்பி விட்டன்ர். வீட்டுக்கு சென்று பார்த்தபோது சங்கிலி இல்லாதததை கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி பதிவு காட்சி மூலம் கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story