போலி பி.எச்டி சான்றிதழ் கொடுத்து பணிபுரியும் ஆசிரியர்கள் - அண்ணா பல்கலை. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களில் 100-க்கும் மேற்பட்டோர் போலி பி.எச்டி பட்டங்களை சமர்பித்துள்ளது அண்ணா பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.
போலி பி.எச்டி சான்றிதழ் கொடுத்து பணிபுரியும் ஆசிரியர்கள் - அண்ணா பல்கலை. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
x
தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் சிலரின் பி.எச்டி சான்றிதழ்களை, அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வுசெய்தபோது, போலி என கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் கருணாமூர்த்தி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், 2020 - 21ஆம் கல்வியாண்டு இணைப்பு அங்கீகாரம் பெற, பொறியியல் கல்லூரிகள் அளித்துள்ள விவரங்களில், சில பேராசிரியா்களின் ஆதாா், நிரந்தர கணக்கு எண் விவரங்கள் தவறாக உள்ளதாகவும், மேலும், சில பேராசிரியா்கள், 2க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவது தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் 100-க்கும் மேற்பட்டோர் போலி பிஎச்.டி. பட்டங்களை சமா்ப்பித்து, பணியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள பதிவாளர், எனவே கல்லூரிகள், தங்களிடம் பணிபுரியும் பேராசிரியா்களின் பிஎச்.டி. பட்டம் குறித்து, சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்திடம் உண்மை தன்மை சான்றிதழை பெற்று, வரும்16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு  அவர் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்