"தமிழகத்தில் 29 பொறியியல் கல்லூரிகள் மூடும் நிலை? - மாணவர் சேர்க்கை இல்லாததே காரணம்"
தமிழகத்தில் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் 29 பொறியியல் கல்லூரிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொறியியல் படிப்பில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் சில கல்லூரிகள் கடந்த ஆண்டு மூடப்பட்டது. மேலும், 11 தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ளனர். இந்நிலையில், 18 கல்லூரிகள் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. மாணவர் சேர்க்கை இல்லாததால், 29 பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story