"அபாய கட்டத்தை தாண்டினார், கொரோனா நோயாளி" - அமைச்சர் விஜயபாஸ்கர்

"கொரோனா குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்"
அபாய கட்டத்தை தாண்டினார், கொரோனா நோயாளி - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
கொரோனா பாதிப்புடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த தகவலை வெளியிட்டார். மேலும், சமூக வலைதளங்களில் கொரோனா குறித்து அவதூறு பரப்பினால், அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும், அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்தார். சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் ஆகிய 5 நாடுகளில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாறு ஆயிரத்து 88 பேர் தற்போது நேரடி கண்காணிப்பில் உள்ளதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மொத்தம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 318 பேரின் வருகை தரவுகள் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்