அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் - ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு சட்டப்பேரவை தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் - ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்
x
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பேரவை தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது எனவும், இந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பார் என கூறியும் உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில் விளக்கம் கேட்டு 11 எம்.எல்.ஏக்களுக்கு பேரவை தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்