கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த மோதல், சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது போலீஸ்

சென்னை சூளைமேட்டில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன.
கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த மோதல், சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது போலீஸ்
x
சென்னை சூளைமேட்டில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பான  சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன. நெல்சன் மாணிக்கம் சாலையில், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் நேருவை, பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 12 மாணவர்கள்  வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 6 பேரை கைது செய்த நிலையில், 5 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் மோதல் சம்பவம் நடைபெற்ற இடத்தில் கிடைக்கப்பற்ற சிசிடிவி. காட்சிகள் வெளியாகி உள்ளன.இதை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் வரும் வழிதடங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்