திருவிழாவில் சகோதரிகள் மூவர் கைவரிசை - பெண் உள்பட சகோதரிகள் மூவர் கைது

கோவையில் நடந்த கோயில் திருவிழாவில் பெண்களிடம் நகைகளை திருடிய லண்டனில் வசிக்கும் பெண் உள்பட சகோதரிகள் மூவர் சிக்கினர்.
திருவிழாவில் சகோதரிகள் மூவர் கைவரிசை - பெண் உள்பட சகோதரிகள் மூவர் கைது
x
கோவையில் கடந்த 4-ஆம் தேதி நடந்த கோனியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு வந்த  10 க்கும் மேற்பட்ட பெண்களின் 35 சவரன் நகைகள் திருடுபோயின. பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் கோவை உக்கடம் மற்றும் பெரியகடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

* சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது மூன்று பெண்களின் செயல், சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்ததால்,  அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

* அவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்களின் பெயர் திருச்சூரை இந்துமதி, லண்டனை சேர்ந்த செல்வி, இலங்கையைச் சேர்ந்த பராசக்தி என்பதும், மூவரும் அக்கா தங்கை உறவு முறை கொண்டவர்கள் என்பதும் தெரியவந்த்து. 

* இவர்கள் மூவரும் திருவிழா நடக்கும் பகுதிகளில் பக்தர்கள் போல ஒன்றுகூடி திருடிவிட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு சென்று விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரியவந்தது. 


Next Story

மேலும் செய்திகள்