ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியத்தில் திமுக - அதிமுகவினர் கடும் மோதல்

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியத்தில் நடைபெற்ற தலைவருக்கான தேர்தலில், அதிமுகவை சேர்ந்த விஜயலெட்சுமி 6 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியத்தில் திமுக - அதிமுகவினர் கடும் மோதல்
x
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியத்தில் நடைபெற்ற தலைவருக்கான தேர்தலில், அதிமுகவை சேர்ந்த விஜயலெட்சுமி 6 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். திமுக கூட்டணியில் 7 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், திமுக வேட்பாளர் 4 வாக்குகள் மட்டுமே பெற்றதாக அறிவித்த‌தால் அதிர்ச்சியடைந்த திமுகவினர், அமைச்சர் செங்கோட்டையன் தலையீட்டால் வெற்றி பெற்றதாக கூறி சுவரொட்டிகளை ஒட்டினர். முன்னாள் அதிமுக எம்எல்ஏ கந்தசாமி தலைமையில் கார்களில் சென்ற அதிமுகவினர் சுவரொட்டிகளை கிழித்து எரிந்தனர். இதனால் ஏற்பட்ட மோதலில், முன்னாள் எம்எல்ஏ கந்தசாமியின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்