சென்னை பாஜக அலுவலகம் மற்றும் எச்.ராஜாவுக்கு மிரட்டல் - முகவரியுடன் கடிதம் எழுதிய நபரை தேடும் போலீஸ்
சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு, தமது பெயர், முகவரியுடன் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வழக்கம் போல், பாஜக அலுவலகத்தில், கடிதங்களை பார்த்தபோது வெடிகுண்டு மிரட்டல் கடிதம் இருந்தது தெரியவந்தது. பாஜக மற்றும் எச். ராஜா மீது தாக்குதல் நடத்துவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை அடுத்து, செங்குன்றத்தில் மின்வாரிய ஊழியராக இருப்பதாகவும், முகவரியுடனும் கடிதம் அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தக் கடிதம் ஜனவரி மாதம் வந்தது என கூறப்படுகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story