அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினம் - அம்பாசமுத்திரத்தில் விமர்சையாக கொண்டாட்டம்
அய்யா வைகுண்டரின் 188 வது அவதார தினம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அய்யா வைகுண்டரின் 188 வது அவதார தினம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி 35 வாகனங்களில் அய்யா வைகுண்டர் ஊர்வலம் நடைபெற்றது. பெண்கள் கோலாட்டம் உள்ளிட்டவற்றுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் அம்பாசமுத்திரத்தை சுற்றியுள்ள கோடரன்குளம், பொன்மாநகர், பள்ளக்கால், புதுக்குடி, குமாரசாமிபுரம், அடைச்சாணி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story