"தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும்" - நீதிபதிகள் கருத்து

தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும் - நீதிபதிகள் கருத்து
x
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த சுந்தரவேல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, நெல்லை தாமிரபரணி ஆற்றை நம் வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும் எனவும் கருத்து தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்