ரசாயன குடோனில் பற்றிய தீ - கரும்புகையினால் பொதுமக்கள் அவதி

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே ரசாயன குடோனில் பற்றிய தீ, 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது.
x
குடோனில் உள்ள பேரல்கள் வெடித்து சிதறியதால், அருகி​ல் உள்ள பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய குடோனுக்கும் தீ பரவி வருகிறது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு, 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்