சேலத்தில் சுகாதாரமற்ற 500 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் - உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி சோதனை

சேலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தரமற்ற அரை டன் ஆட்டு இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
x
சேலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தரமற்ற அரை டன் ஆட்டு இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பால்பண்ணை, கொல்லப்பட்டி மற்றும் இரும்பாலை பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் தரமற்ற இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, இறைச்சிக் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்ட மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அரை டன் ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர். நோய்வாய்ப்பட்ட ஆடுகளை கைப்பற்றிய அதிகாரிகள், இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த தகவல் அறிந்த அப்பகுதி அசைவ பிரியர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்