விக்கிரமராஜா வீட்டின் மீது கற்கள் வீச்சு - சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

சென்னையில், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வீட்டை கல்வீசி தாக்கிய மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விக்கிரமராஜா வீட்டின் மீது கற்கள் வீச்சு - சம்பவம் குறித்து போலீசார்  விசாரணை
x
சென்னை கே.கே. நகரில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் வீடு உள்ளது. இவர் வெளியூர் சென்ற நிலையில், மர்ம கும்பல் ஒன்று திடீரென அவரது வீட்டை முற்றுகையிட்டு கற்களை வீசிவிட்டு தப்பி ஓடியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்