லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவில் காரில் விரட்டிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
x
லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவில் காரில் விரட்டிப்பிடித்து கைது செய்துள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தனி துணை ஆட்சியராக பணியாற்றி வரும் தினகரனிடம், ரஞ்சித்குமார் என்பவர் பூர்வீக சொத்து ஆவணங்களை சரிபார்ப்பது தொடர்பாக அணுகியுள்ளார். இதற்கு, தினகரன் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது குறித்து ரஞ்சித் குமார் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கவே, அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய 50 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை விரட்டி சென்று பிடித்தனர். அவரிடம் இருந்து மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்