நடிகையை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பல் - சென்னையை சேர்ந்த தந்தை, மகன் கைது

நடிகையை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் ஆசிட் வீசுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற தந்தை மற்றும் மகனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகையை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பல் - சென்னையை சேர்ந்த தந்தை, மகன் கைது
x
சென்னை முகப்பேரை சேர்ந்தவர்  ராஜசேகரன் மற்றும் அவரது மகன் அமுதன் வெங்கடேசன் ஆகிய இருவரையும் மயிலாப்பூர் அனைத்து மகளிர்  போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நடிகை சுருதியின்  தாய் சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  ராஜசேகரன் தூரத்து உறவினர் என்றும் , கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் நடிகை ஸ்ருதி படித்துக் கொண்டிருக்கும் போது, ராஜசேகரன் மகன் அமுதன் வெங்கடேசன் ஒருதலைப் பட்சமாக சுருதியை காதலித்ததாக சித்ரா தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஒருகட்டத்தில் கோவையை சேர்ந்த 5 பேர் கும்பலுடன் சேர்ந்து தங்களிடம் பணம் பறிக்க முயன்றதாகவும், இதற்காக தங்கள் மீது பொய் புகார்கள் அளித்து, அதனை திரும்பப் பெறுவது போல நாடகமாடியதாகவும் நடிகை சுருதியின் தாய் சித்ரா தெரிவித்துள்ளார். 

இதனிடையே, நடிகை ஸ்ருதி மற்றும் தாய் சித்ரா  ஆகியோர் குடும்பமாக சேர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன்பாக மேட்ரிமோனியல் மூலமாக பலரையும் மோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்த விவகாரத்தில் ராஜசேகரனுக்கும், அமுதனக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோவையை சேர்ந்த பணம் பறிக்கும் கும்பலையும் போலீசார் கைது செய்து விரைவில் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.





Next Story

மேலும் செய்திகள்