சிறுவனை அடித்து கொன்ற தாயின் கள்ளக்காதலன் கைது

நெல்லையில் தாயின் கள்ளக்காதலன் 4 வயது சிறுவனை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனை அடித்து கொன்ற தாயின் கள்ளக்காதலன் கைது
x
நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகே உள்ள டாணா பகுதியை சேர்ந்தவர் தீபா. அந்த பெண்ணுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் சொரிமுத்து  என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும், இதை தீபாவின் கணவர் அந்தோணி பிரகாஷ் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது 4 வயது மகன் மற்றும் கள்ளக்காதலன் சொரிமுத்துவுடன் நெல்லை சென்ற தீபா விடுதியில் தங்கியுள்ளார். 

அவரது கணவர் அந்தோணி பிரகாஷ் போன் செய்த போது தீபா கள்ளக்காதலனுடன் இருப்பது மகன் மூலம் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் சொரிமுத்து  சரமாரியாக தாக்கியதில் , மூச்சு திணறி மயக்கமடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் இறந்து போனான். இதையடுத்து தீபாவை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பிறகு விடுவித்தனர். தலைமறைவாக இருந்த கள்ளகாதலன் சொரிமுத்துவை போலீசார் நெல்லை அருகே கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்