"தேர்வு முறைகேடு செய்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்" - சகாயம்,ஐ.ஏ.எஸ்.

அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், தேர்வு முறைகேடுகள் குறித்து மாணவர்கள் அவ நம்பிக்கை கொள்ள வேண்டாம் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.
x
அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், தேர்வு முறைகேடுகள் குறித்து மாணவர்கள் அவ நம்பிக்கை கொள்ள வேண்டாம் என ஐ.ஏ.எஸ்.  அதிகாரி சகாயம் கூறியுள்ளார். தூத்துக்குடியில், போட்டித் தேர்வு பயிற்சி மைய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். முறைகேட்டில் ஈடுபடுவோர், இளைஞர்களை நிலைகுலைய செய்கிறார்கள் என்று குறிப்பிட்ட சகாயம், அவ்வாறு முறைகேட்டில் ஈடுபடுவோரை, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்