"கருத்தடை செய்ய ஆண்கள் முன்வர வேண்டும்" : அமைச்சரின் அழைப்பால் பேரவையில் சிரிப்பலை

கருத்தடை செய்ய ஆண்களுக்கு அழைப்பு விடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
கருத்தடை செய்ய ஆண்கள் முன்வர வேண்டும் : அமைச்சரின் அழைப்பால் பேரவையில் சிரிப்பலை
x
கருத்தடை செய்ய ஆண்களுக்கு அழைப்பு விடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. வேடந்தூர் உறுப்பினர் பரமசிவம் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இதுவரை 800 ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொண்டிருப்பதாக விளக்கம் அளித்தார். தகுதி உள்ள ஆண்கள் யார் வந்தாலும், கத்தியின்றி, ரத்தமின்றி, எவ்வித தழும்புமின்றி இரண்டு மணி நேரத்தில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 

 


Next Story

மேலும் செய்திகள்