"நீர்நிலைகளை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்" - 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கிராம ஊராட்சிக்கு தனி சுற்றறிக்கை அனுப்பி நீர்நிலைகளை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலைகளை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் - 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
கிராம ஊராட்சிக்கு தனி சுற்றறிக்கை அனுப்பி நீர்நிலைகளை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தனி சுற்றறிக்கை அனுப்பி, நீர்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்