கடனை திருப்பி தராததால் ஆத்திரம் - தச்சுத்தொழிலாளியை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் வாங்கிய கடனை திருப்பி தராத தச்சுத்தொழிலாளியை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடனை திருப்பி தராததால் ஆத்திரம் - தச்சுத்தொழிலாளியை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
x
சென்னையில் வாங்கிய கடனை திருப்பி தராத தச்சுத்தொழிலாளியை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளி சேகர், தனது நண்பர் ரவியிடம் 2 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனை ரவி திருப்பிக் கேட்ட போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவி, சேகரை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி, ரவிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்