புதுக்கோட்டை : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 மீனவர்க​ள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவரை, இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 மீனவர்க​ள் கைது
x
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியில் வசித்துவரும் மாரியப்பன் என்ற மீனவரே தாக்கப்பட்டவர். 5 பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ள மாரியப்பன், நேற்று முன்தினம்  மீன் பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர், அவருடன் சேர்த்து 11 தமிழக மீனவர்களை சிறைபிடித்தனர். விசாரணைக்கு பிறகு நீரியல் துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது செய்தி சேகரிக்க சென்ற இலங்கை செய்தியாளர்களிடம், தம்மை இலங்கை கடற்படையினர் கட்டையால் தாக்கிவிட்டதாகவும், இதனால் தமக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார். தாம் தாக்கப்பட்டது குறித்து நீதிபதியிடம் தெரிவிக்கக் கூடாது என இலங்கை கடற்படையினர் மிரட்டுவதாகவும் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்