பழுதடைந்த கடலோர பாதுகாப்பு குழும படகுகள் : படகுகளை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பழுதடைந்துள்ள கடலோர பாதுகாப்பு குழும படகுகளை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பழுதடைந்துள்ள கடலோர பாதுகாப்பு குழும படகுகளை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட 52 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய கடற்கரை பகுதிகளுக்கு, 3 கடலோர பாதுகாப்பு குழும படகுகள் உள்ளன. அதில் 2 படகுகள் பழுதடைந்த நிலையில், ஒன்று மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. எனவே, மீனவர்களுக்கு பாதிப்பு வந்தால் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும், எனவே படகுளை சீரமைக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

