ஜி.எஸ்.டி. சாலையில் இஸ்லாமியர்கள் மறியல் போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து சென்னை ஆலந்தூரில், ஏராளமான இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜி.எஸ்.டி. சாலையில் இஸ்லாமியர்கள் மறியல் போராட்டம்
x
சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார்  தடியடி நடத்தியதை  கண்டித்து சென்னை ஆலந்தூரில், ஏராளமான இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசர்கானா ஜி.எஸ்.டி. சாலையில் இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் மீனம்பாக்கம் நோக்கி செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்ட இஸ்லாமியர்கள், சாலை ஒரத்தில் உள்ள நடுபாதையில் ஆர்பாட்டத்தில்  ஈடுப்பட்டனர். இதனையடுத்து போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்